செ.துஜியந்தன்
மண்முனைப்பற்று ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்று 11 ஆம் திகதி சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ கோ.கு.கிரிதரக்குருக்கள் தலைமையில் நடைபெறும் உற்சவத்தில் 18 ஆம் திகதி மாம்பழத்திருவிழா, 19 ஆம் திகதி திருவேட்டை திருவிழா, 21 ஆம் திகதி தீர்த்தோற்சவம் ஆகியன இடம்பெறவுள்ளது. 22 ஆம் திகதி பூங்காவன வசந்தோற்சவ ஊஞ்சல், 23 ஆம் திகதி வைரவர் பூசை ஆகியன இடம்பெறும்.
தினமும் காலை பூசை 6.30மணிக்கு ஆரம்பித்து பகல் 11 மணிக்கு சுவாமி உள்வீதி வலம் வருதல் இடம்பெறும். மாலை பூசை 5மணிக்கு ஆரம்பமாகி பஜனை, சமயசொற்பொழிவு, வசந்தமண்டபபூசை 8மணிக்கு ஆரம்பித்து சுவாமி உள்வீதி, வெளிவீதி வலம்வருதல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments: