மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஆண்டு டெங்கின் தாக்கம் காரணமாக இந்த ஆண்டு 5316 பாதிக்கப்பட்டிருந்ததுடன் 09 மரணங்களும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு தொடர்பான ஒருங்கிணைப்பு கூட்டம் நேற்று புதன்கிழமை(27-12-2017) பிற்பகல் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு தொடர்பான ஒருங்கிணைப்பு கூட்டம் நேற்று புதன்கிழமை(27-12-2017) பிற்பகல் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட அரச திணைக்களங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடனான டெங்கு கட்டுப்படுத்தல் தொடர்பான ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது .
நடைபெற்ற கூட்டத்தில் 2017ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் அதற்கான அரச திணைக்கள அதிகாரிகளின் செயல்பாடுகள தொடர்பாக கலந்துரையாடப்பட்டது
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் ஆண்டில் அரச திணைக்கள அதிகாரிகளினால் டெங்கு கட்டுப்படுத்தல் தொடர்பாக முன்னெடுக்கப்பட செயல்திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி எஸ் ஸ்ரீகாந்த் ,பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பிரதி பணிப்பாளர் எம் . அச்சுதன் ,பிராந்திய தொற்றுநோயிலாளர் வைத்தியர் திருமதி தர்சினி காந்தரூபன் மற்றும் .மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் . பிரதேச செயலாளர்கள் , பொலிஸ் திணைக்கள உத்தியோகத்தர்கள் , பொதுசுகாதார பரிசோதகர்கள் , சிறைச்சாலை அதிகாரிகள் ,கல்வித்திணைக்கள அதிகாரிகள் ,முப்படை அதிகாரிகள் ,பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகள் ,அரச சார்பற்ற நிறுவன பிரதி நிதிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.
தற்போது மழைகாலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் நுளம்பினை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் அதற்கு தேவையான வளங்களின் பற்றாக்குறை அவற்றினை பெற்று;ககொள்வது தொடர்பில் இங்கு கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
விசேட டெங்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான ஆளணிகளைப்பெற்றுக்கொள்வது போன்ற பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இதன்போது அம்கோர் அரசசார்ப்பற்ற நிறுவனத்தினால் ஒரு தொகை புகை விசுறும் இயந்திரங்கள் மாவட்ட அரசாங்க அதிபரிடம் வழங்கிவைக்கப்பட்டன.
0 comments: