ரயில்கள் இரண்டு நேருக்குநேர் மோதி ஏற்படவிருந்த பாரிய விபத்தொன்று ரயில் கடவை காவலாளியினால் தடுக்கப்பட்ட சம்பவமொன்று இன்று பகல் ஹிங்தொட்ட ரயில் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
மாத்தறையிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த ரயிலும் கண்டியிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயிலும் ஒரே தண்டவாளத்தில் பயணித்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த ரயில்கள் இரண்டும் ஒரே தண்டவாளத்தில் நேர் எதிரே வருவதனை அறிந்த பியதிகம பாலத்திற்கு அருகில் ரயில் கடவையொன்றில் காவலுக்கு நின்ற ஊழியர் உடனடியான சிவப்பு கொடியை அசைத்து இரண்டு ரயில்களுக்கும் அபாயம் தொடர்பாக சமிக்ஞையை காட்டியுள்ளார்.
இதன்போது இரண்டு ரயில்களும் 10 அடிக்கு இடைப்பட்ட தூரத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் ரயில்கள் உடனடியாக நிறுத்தப்பட்டிருக்காவிட்டால் பாரிய விபத்தொன்று ஏற்பட்டிருக்குமென ரயில் சாரதிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த ரயில்கள் இரண்டும் ஹிங்தொட்ட ரயில் நிலையத்தில் வாழி மாற்றி செல்வதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments: