Home » » சம்பந்தன், மாவை, துரைக்கு திருகோணமலையில் வரவேற்பு!

சம்பந்தன், மாவை, துரைக்கு திருகோணமலையில் வரவேற்பு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் மாவை சேனாதிராஜா, கட்சியின் புதிய பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் ஆகியோரை வரவேற்கும் நிகழ்வும், தமிழரசுக் கட்சியின் எட்டாவது தலைவராக இருந்து அரும்பணிகளாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைப் பாராட்டும் நிகழ்வும் நேற்று திருகோணமலையில் நடைபெற்றது.. தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் நேற்று மாலை 4.30 மணிக்கு திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இந்தநிகழ்வுகள் நடைபெற்றன.
கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரும் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளையின் தலைவருமான சி.தண்டாயுதபாணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வரவேற்புரையை திருகோணமலை நகரசபைத் தலைவர் க. செல்வராஜா (சுப்ரா) நிகழ்த்தினார். இந்நிகழ்வுகளில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள், தமிழரசுக் கட்சியின் சேருவில, மூதூர், திருகோணமலை தொகுதிகளின் உறுப்பினர்கள், கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |