Home » » அனைத்து அரச ஊழியர்களுக்கும் மானியம்' - அரசாங்கம் வெளியிட்ட தகவல்

அனைத்து அரச ஊழியர்களுக்கும் மானியம்' - அரசாங்கம் வெளியிட்ட தகவல்


புதிய வரிச் சீர்த்திருத்தத்தில் அரசாங்கத்திற்கு ஏதேனும் ஒரு வழியில் வருமானம் அதிகரித்தால், அனைத்து அரச ஊழியர்களுக்கும் மானியம் வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

வரிச் சீர்திருத்தங்களினால் அரசாங்கத்திற்கு வருமானம் அதிகரிக்கும் பட்சத்தில் மேலும் மானியங்களை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதி அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அரச ஊழியர்களில் நூற்றுக்கு 10 வீதமானவர்கள் மாத்திரமே புதிய வரிச் சீர்த்திருத்தத்திற்கு உள்வாங்கப்படுவதோடு, 90 வீதமானவர்கள் புதிய வரிச் சீர்த்திருத்தத்திற்கு உட்படுவதில்லை” - என்றார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |