Home » » மாணவர்களின் மதிய உணவுக்காக வழங்கப்பட்ட பணத்தில் கணவரின் பிறந்தநாள் விழாவை நடத்திய அதிபர்!

மாணவர்களின் மதிய உணவுக்காக வழங்கப்பட்ட பணத்தில் கணவரின் பிறந்தநாள் விழாவை நடத்திய அதிபர்!

 


மெதிரிகிரிய பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றின் மாணவர்களுக்கு காலை உணவுக்காக ஒதுக்கப்பட்ட பணம் அதிபரின் கணவரின் பிறந்தநாள் விழாவிற்காக உணவு தயாரிக்க பயன்படுத்தப்பட்டுள்ளதாக பாடசாலை அபிவிருத்திச் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இது தொடர்பில் பிராந்திய மற்றும் மாகாண கல்வி அலுவலகங்களுக்கும் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

இந்த உணவுத் திட்டத்தின் கீழ், இப்பாடசாலையின் ஆரம்பப் பிரிவில் பயிலும் 720 மாணவர்களின் தினசரி உணவுக்காக அரசு ஒரு நாளைக்கு 100 ரூபா வீதம் 72 000 ரூபா செலவிடுகிறது.

டிசம்பர் 05, 2022 அன்று அதிபரின் கணவரின் பிறந்தநாள் விழாவிற்கு, உணவு வழங்குபவர் பால் சாதம், கொக்கிஸ் , கட்லெட் போன்றவற்றை சமைத்துள்ளார், மேலும் குழந்தைகளின் உணவுக்காக ஒதுக்கப்பட்ட பணம் அதற்கு பயன்படுத்தப்பட்டது என்பதும் அறியப்படுகிறது.

சம்பவத்தன்று, குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட மாட்டாது என்றும், அன்றைய தினம் குழந்தைகள் வீட்டில் இருந்து சாப்பிட ஏதாவது கொண்டு வருமாறும் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் அன்றைய தினம் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டதாக அந்த வவுச்சரில் கையெழுத்திடப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிபரின் கணவரும் அப்பகுதியிலுள்ள வேறொரு பாடசாலையின் அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது .

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |