Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தமிழ் மக்களுக்கு எவ்வித நியாயமும் கிடைக்காது என்ற சூழ்நிலைகளைப் பயன்படுத்தி சில முஸ்லீம் அரசியல்வாதிகள் தமிழர்களின் அதிகாரங்களை முடக்கிக் கொண்டிருக்கின்றார்கள்

 


முன்வைத்திருந்தார். இதற்குப் பதிலளிக்க வேண்டிய நிலைப்பாட்டில் உள்ளேன்.

கௌரவ உறுப்பினர் அவர்களே, கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் என்பது 1989ம் ஆண்டு தொடக்கம் 1993ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் உப பிரதேச செயலகமாக இருந்தது. ஆனால் தற்பேது அது 1993.07.28ம் திகதிய அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம் பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டு விட்டது. ஆனால் இந்த நாட்டிலே மாறி மாறி ஆட்சியமைக்கின்ற அரசாங்கங்களோடு இணைந்து சில முஸ்லீம் அரசியல்வாதிகள் இது உங்கள் சமூகத்தின் பிரச்சனை அல்லாமல் இருந்தாலும் கடந்த முப்பது வருட காலமாக போர்ச்சூழலை அனுபவித்த எமது தமிழ் சமூகத்திற்கு இந்த நாட்டிலே எந்தவிதமான நியாயமும் கிடைக்கப்படாது என்ற சூழ்நிலைகளையெல்லாம் பயன்படுத்தி எமது சமூகத்திற்கான அதிகாரங்களை முடக்கிக் கொண்டிருக்கின்றீர்கள் என்பது தான் உண்மை.

1993.07.28ம் திகதி எடுக்கப்பட்ட அமைச்சரவைத் தீர்மானம் எங்கள் கைகளிலே இருக்கின்றது. நாங்கள் ஒரு முடிவை எடுத்திருக்கின்றோம். ஆனால், எந்த இனமாக இருந்தாலும சரி நாங்கள் சமூக ரீதியாகப் பிளவுகளை ஏற்படுத்துகின்ற எந்த அரசியலையும் ஒருபோதும் முன்னெடுக்க மாட்டோம். இந்த நாட்டிலே நாங்கள் இப்போது அரசியலைச் செய்து விட்டு வெளியேறி விடலாம். ஆனால், சிங்கள மக்களும் தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் இந்த நாட்டிலே நிலையாக வாழத்தான் போகின்றார்கள்.

எனவே இந்த கல்முனை விடயம் என்பது திட்டமிட்ட ஒரு சதி. இந்த நாட்டின் தலைவருக்கும், பிரதமருக்கும் அது தொடர்பில் தீர்மானம் எடுக்க முடியாத சூழல். ஏனெனில் எந்த அரசாங்கம் வந்தாலும் அவர்களுக்குச் சாதகமாகக் கைகளை உயர்த்தி அமைச்சுப் பதவிகளை எடுக்;கின்ற விடயமே இடம்பெற்று வந்திருக்கின்றது. எனவே எதிர்காலத்திலாவது மக்கள் இந்த சமூகங்களை இணைத்து பயணிக்கக் கூடிய அரசியல்வாதிகளை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Post a Comment

0 Comments