Advertisement

Responsive Advertisement

அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் அதிரடி தீர்மானம்!


 மின்சார சபை மற்றும் பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனம் என்பன தமது தொழிற்சங்கங்களுடன் செய்து கொண்ட கூட்டு ஒப்பந்தங்களை இரத்து செய்யவுள்ளதாக மின்சார மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதன்படி அந்த ஒப்பந்தங்களை இரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை வழங்கியதாக அமைச்சர் கூறினார்.

இந்தக் கூட்டு ஒப்பந்தங்களின்படி இரண்டு நிறுவனங்களின் ஊழியர்களும் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை சம்பள அதிகரிப்பு, வருடாந்த போனஸ், இதர கொடுப்பனவுகள் மற்றும் பல நன்மைகளைப் பெறுவார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.

Post a Comment

0 Comments