Home » » மட்டக்களப்பில் பாடசாலை மாணவன் தூக்கிட்டு தற்கொலை ! கல்லடி பிரதேசத்தில் சோகம்

மட்டக்களப்பில் பாடசாலை மாணவன் தூக்கிட்டு தற்கொலை ! கல்லடி பிரதேசத்தில் சோகம்

 


காத்தாங்குடி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கல்லடி நெச்சிமுனை பிரதேசத்தை சேர்ந்த பாடசாலை மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலஸார் தெரிவித்துள்ளனர்.

கல்லடி நெச்சிமுனையைச்சேர்ந்த 18 வயதுடையவரே தூக்கிட்டு தற்கொலை செய்தவராவார்.

இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது மட்டக்களப்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயிரியல் துறையில் கல்வி கற்று வரும் குறித் மாணவன் தனது வீட்டில் வளர்க்கும் நாயை அடித்ததனால் அதனை கேட்டு அவரின் தந்தை திட்டியதாகவும் அதனையடுத்து மாணவன் மனமுடைந்த மாணவன் கடந்த (05)ம் திகதி தனது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் வீட்டின் மேல் மாடியில் உள்ள சமையலறையில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்த போது வீட்டுக்கு வந்த தாயார் 

சம்பவத்தைக்கண்டு தூக்கில் இருந்து மீட்டெடுத்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் (05) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்;ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற காத்தான்குடி பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி வேலு மணிமாறன் சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனையின் பின்னர் சடலத்தை நெருங்கிய உறவினர்களிடம் ஒப்படைக்கும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டார். மேலதிக விசாணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |