Advertisement

Responsive Advertisement

15 வயதான மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 42 வயது ஆசிரியைக்கு பிணை!

 


15 வயதான மாணவனை முத்தமிட்டு பாலியல் பலாத்காரம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஆசிரியை தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு ஹொரணை நீதிமன்ற நீதவான் சந்தன கலன்சூரிய உத்தரவிட்டுள்ளார்.


மேலும், சாட்சிகளுக்கு அழுத்தம் வழங்கக் கூடாது என்றும் நீதவான் உத்தரவிட்டார். ஹொரணை கல்வி வலய அலுவலகத்துடன் இணைந்த பாடசாலை ஒன்றில் 10ம் தர ஆசிரியையான 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயாரே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments