Home » » பரீட்சைக்குத் தோற்றிய மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த மேற்பார்வையாளர் கைது !

பரீட்சைக்குத் தோற்றிய மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த மேற்பார்வையாளர் கைது !

 


நாடளாவிய ரீதியில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப்பரீட்சைக்குத் தோற்றிய மாணவியொருவரை பாலியல் ரீதியில் துன்புறுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், அந்த பரீட்சை மண்டபத்தின் மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


அநுராதபுர மாவட்டத்திலுள்ள பரீட்சை மண்டபத்தில் கடமையாற்றிய மேற்பார்வையாளர் ஒருவரே, பரீட்சார்த்தியை மண்டபத்துக்கு வைத்தே பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளார்.

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்காக கடந்த 25 ஆம் திகதி பரீட்சை எழுதச் சென்றிருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட மாணவி, தனக்கு நேர்ந்ததை ஆசிரியையிடம் கூறியுள்ளார். பின்னர் தனது பெற்றோருடன், கடந்த 26ஆம் திகதி ஹித்தோகம பொலிஸூக்குச் சென்று முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து, சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பரீட்சை மண்டப மேற்பார்வையாளர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு, எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |