மூன்றாம் இணைப்பு
சடலமாக மீட்கப்பட்ட பண்டாரகமை - அட்டுலுகம பகுதியைச் சேர்ந்த சிறுமியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 29 வயதுடைய இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
குறித்த நபர் உயிரிழந்த சிறுமியின் உறவினருமாவார்.
இதேவேளை, சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ள நிலையில், குறித்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இரண்டாம் இணைப்பு
பண்டாரகம, அட்டுலுகம பகுதியில் கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற சிறுமி பாத்திமா ஆயிஷாவின் மரணம் தொடர்பில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
29 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டவர், சிறுமியின் உறவினர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிரேத பரிசோதனை
சிறுமியின் பிரேத பரிசோதனைக்காக 3 சட்ட வைத்திய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்வைத்த சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதவான் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளார்.
இதற்கமைய, சிறுமியின் சடலத்தின் மீதான பிரேத பரிசோதனை பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் இடம்பெறுகிறது.
இன்றைய தினம் மேற்கொள்ளப்படும் பிரேத பரிசோதனையை அடுத்து முழுமையான அறிக்கை சமர்பிக்கப்படும் என பண்டாரகமை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
நாட்டையே உலுக்கிய அட்டுலுகம பிரதேசத்தில் உள்ள 9 வயது ஆயிஷாவின் கொலை சம்பவம் தொடர்பில், சிறுமியுடைய வீட்டிற்கு அடிக்கடி வருகை தந்த அயலவர் ஒருவர் தொடர்பில் காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
28 வயதுடைய சந்தேக நபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும், குறித்த நபர் சிறுமியின் தந்தையுடன் இணைந்து போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டு வந்தமை காவல்துறையினரின் விசாரணைகளில் இருந்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த நபர் சிறுமியின் வீட்டிற்கு அடிக்கடி வருகை தருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சிறுமி காணாமல் போனதையடுத்து அந்த பிரதேசம் முழுவதும் சிறுமியைத் தேடியபோது, 28 வயதுடைய அந்த நபரும் சிறுமியைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
காவல்துறையினரின் சந்தேகம்
சிறுமி கொல்லப்படுவதற்கு முன்னர் சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் காவல்துறையினர், இன்று (30) நடத்தப்படும் பிரேத பரிசோதனையின் மூலம் இதனை உறுதிப்படுத்த முடியும் என தெரிவிக்கின்றனர்.
சிறுமி காணாமல் போன தினத்தில் கோழி இறைச்சி வாங்குவதற்காக கடைக்கு சென்ற போது குறித்த 28 வயதுடைய நபர் நடைபாதையில் இருந்ததாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
பின்னர் அவர் சிறுமியை சதுப்பு நிலத்தை நோக்கி இழுத்துச் சென்றதாகவும், சிறுமி கத்தத் தொடங்கியதால் சேற்றில் முகத்தை வைத்திருக்கும் போது அவர் இறந்திருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இந்த சந்தேகங்களை உறுதிப்படுத்தும் வகையில் தகவல்கள் கிடைத்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆயிஷாவை பார்த்த மற்றுமொரு சிறுமி
குறித்த சிறுமியை வீதியில் சென்று கொண்டிருந்த போது அப்பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு சிறுமி ஒருவர் பார்த்துவிட்டு வீதியில் தனியாக இருப்பது குறித்து விசாரித்து விட்டு சென்றதாகவும் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
"தாத்தா வரும் வரை காத்திருக்கின்றேன்" என சிறுமி ஆயிஷா தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.
காவல்துறையினரின் நடவடிக்கை
காவல்துறை மா அதிபரின் உத்தரவின் பேரில், குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசேட காவல்துறை குழுவொன்று அட்டுலுகமவுக்குச் சென்று குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
பண்டாரகம காவல்துறையினர் கிராம மக்களின் உதவியுடன் இந்த குற்றத்தின் மறைக்கப்பட்ட விபரங்களை வெளிக்கொணர முடிந்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்ற
0 Comments