Advertisement

Responsive Advertisement

முச்சக்கர வண்டிக் கட்டணமும் அதிகரிக்கப்படவுள்ளது!


முச்சக்கர வண்டிக் கட்டணத்தை அதிகரிக்க முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

நாட்டில் பொருட்கள் மற்றும் சேவைகளின் திடீர் விலை அதிகரிப்புக்கு ஏற்ப, கட்டணத்தை அதிகரிக்க முச்சக்கர வண்டிச் சாரதிகள் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரான சுதில் ஜயருக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நாளை (13) முதல் நடைமுறைக்கு வரும்வகையில் இந்தக் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது.

முதல் கிலோமீற்றருக்கான கட்டணம் 70 ரூபாவாகவும், மேலதிகமாக ஒவ்வொரு கிலோமீற்றருக்கும் நகர எல்லைக்குள் 55 ரூபாவாகவும் உயர்த்தப்படவுள்ளது.

கிராமப்புறங்களில் முதல் கிலோமீற்றருக்கு 80 ரூபாவாகவும், மேலதிக கிலோமீற்றருக்கு 60 ரூபாவாகவும் உயர்த்தப்படும். எரிபொருள் விலை 50 ரூபாவினால் அதிகரித்த போதிலும், பொதுமக்களின் பயணத்துக்கு மேலதிகமாக 10 ரூபா மாத்திரமே அறவிடப்படும்.

இந்த கட்டண அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்குவரும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments