Home » » அம்பாறை மாவட்ட செயலக முன்னாள் நிருவாக உத்தியோகத்தர் ஸ்ரீயானி பத்மலதாவின் பிரியாவிடை நிகழ்வு

அம்பாறை மாவட்ட செயலக முன்னாள் நிருவாக உத்தியோகத்தர் ஸ்ரீயானி பத்மலதாவின் பிரியாவிடை நிகழ்வு

 


( அஸ்ஹர் இப்றாஹிம்)

அம்பாறை மாவட்ட செயலகத்தில் கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச் சென்ற  முன்னாள் நிருவாக உத்தியோகத்தர் ஸ்ரீயானி பத்மலதா அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்  ஜே.எம்.ஏ.டக்ளஸ்  தலைமையில் மாவட்ட செயலகத்தின் கேடபோர் கூடத்தில் அண்மையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்டச் செயலகத்தின் மேலதிக மாவட்டச் செயலாளர். ஜெகதீசன், மாவட்ட உதவிச் செயலாளர் விமான்சா செனவிரத்ன, பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர் பாக்யராஜா, பிரதம பொறியியலாளர், வடிவமைப்பு திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் மற்றும் பணியாளர்கள் உட்பட மாவட்டச் செயலகத்தின்  அனைத்து அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |