( அஸ்ஹர் இப்றாஹிம் )
அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிலுமுள்ள முதியோர் மற்றும் சிரேஷ்ட பிரஜைகள் தமது தேவைகளை நிறைவேற்றுவதற்காக சமுகம் தரும்போது , சேவை நிலையங்களில் முன்னுரிமை வழங்கி அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்குமாறு சாய்ந்தமருது ஓய்வுதியர் சங்கம் கேட்டுள்ளது.
தமது வாழ்நாளில் பலவிதமான திணைக்களங்களிலும் பாடசாலைகளிலும் சேவையாற்றி தற்போது வயதாகி ஓய்வான நிலையில் தமக்கேற்படும் தேவைகளை புர்த்தி செய்யும் வகையில் அரச திணைக்களங்கள் , பிரதேச செயலகங்கள் , தபாலகம் , வைத்தியசாலை , பொலிஸ் நிலையம் , நூலகம் , இலங்கை மின்சாரசபை , வங்கி மற்றும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அகியவற்றிற்கு வருகை தரும் போது நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டி இருப்பதால் பலவிதமான கஸ்டங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
இதனால் முதியோர் மற்றும் சிரேஷ்ட பிரஜைகளுக்கு மதிப்பளித்து அவர்களின் தேவைகளை உரிய நேரத்திற்கு நிறைவேற்றிக் கொடுக்க திணைக்கள அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டுமெனவும் , சில சேவை நிலையங்களில் சிரேஷ்ட பிரஜைகளுக்கென தனியான பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஓய்வுதியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
தமது வாழ்நாளில் பலவிதமான திணைக்களங்களிலும் பாடசாலைகளிலும் சேவையாற்றி தற்போது வயதாகி ஓய்வான நிலையில் தமக்கேற்படும் தேவைகளை புர்த்தி செய்யும் வகையில் அரச திணைக்களங்கள் , பிரதேச செயலகங்கள் , தபாலகம் , வைத்தியசாலை , பொலிஸ் நிலையம் , நூலகம் , இலங்கை மின்சாரசபை , வங்கி மற்றும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அகியவற்றிற்கு வருகை தரும் போது நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டி இருப்பதால் பலவிதமான கஸ்டங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
இதனால் முதியோர் மற்றும் சிரேஷ்ட பிரஜைகளுக்கு மதிப்பளித்து அவர்களின் தேவைகளை உரிய நேரத்திற்கு நிறைவேற்றிக் கொடுக்க திணைக்கள அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டுமெனவும் , சில சேவை நிலையங்களில் சிரேஷ்ட பிரஜைகளுக்கென தனியான பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஓய்வுதியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
0 Comments