ஹட்டன் நகருக்கு குடிநீரை விநியோகிக்கும் ஹட்டன்- சிங்கமலை குளத்திலிருந்து இன்று (17) காலை ஆணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வனப்பகுதிக்கு விறகு சேகரிப்பதற்காகச் சென்ற நபர் ஒருவர், இந்த சடலத்தைக் கண்டு, ஹட்டன் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
எனினும் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பாக இதுவரை எவ்வித தகவல்களும் உறுதிப்படுத்தப்படவில்லை ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
0 Comments