Home » , » தடுப்பூசி ஏற்றும் நிகழ்வு காரைதீவு வைத்திய அதிகாரி பிரிவில்...

தடுப்பூசி ஏற்றும் நிகழ்வு காரைதீவு வைத்திய அதிகாரி பிரிவில்...



( அஸ்ஹர் இப்றாஹிம்)

காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட காரைதீவு , மாளிகைக்காடு மற்றும் மாவடிப்பள்ளி பிரதேசங்களைச் சேர்ந்த 20 வயதிற்கு மேற்பட்ட  2  வது தடுப்புசிகளைப் பெற்று 3 மாதங்கள் கடந்த ஆண் , பெண் இருபாலாருக்கும் மூன்றாவது பைஸர் தடுப்புசியினை செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ( 16 ) காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மற்றும் மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலயம் ஆகியவற்றில் தடுப்புசி செலுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிப்பதற்கும், கொடிய கொவிற் 19 வைரசுவின் தாக்கத்திலிருந்து நம்மை நாமே பாதுகாத்து கொள்ளும் நோக்கிலும் இத் தடுப்புசி செலுத்தப்படவுள்ளதாக காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி .தஸ்லிமா பஸீர் அறிவித்துள்ளார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |