Home » » விபசார விடுதி சுற்றிவளைப்பு; இருவர் கைது

விபசார விடுதி சுற்றிவளைப்பு; இருவர் கைது

 


நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட் ஏத்துகால பகுதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்திச்செல்லப்பட்ட விபசார விடுதி சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.


நீர்கொழும்பு பொலிஸாரால் நேற்று(12) முன்னெடுக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பின்போது, விடுதியின் முகாமையாளரான பெண் மற்றும் விபசாரத்தில் ஈடுபடுவதற்காக அங்கு தங்கியிருந்த மற்றுமொரு பெண் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இரண்டு பெண்களும் கண்டி பகுதியை சேர்ந்த 23 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களான இரண்டு பெண்களையும் நீர்கொழும்பு நீதிமன்றில் இன்றைய தினம் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |