அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச நாட்டின் கல்வித் துறையின் நிர்வாகத்தை, இராணுவத் தளபதியிடம் கையளிக்க முயற்சிக்கும் விதத்தை காணக் கூடியதாக உள்ளதென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், அரச தலைவர் கையாண்ட அனைத்து துறைகளும் அழிந்து போயுள்ளன. தற்போது கல்வித் துறையையும் அழிக்க போகின்றாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.
0 comments: