Home » , » தடுப்பூசி போட்டதால் உயிரிழந்தாரா சுண்ணாகம் பாடசாலை அதிபர்?

தடுப்பூசி போட்டதால் உயிரிழந்தாரா சுண்ணாகம் பாடசாலை அதிபர்?

 


இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த சுண்ணாகம் கந்தரோடை ஸ்கந்தவரோதய ஆரம்ப பாடசாலை அதிபர் தடுப்பூசி போட் நிலையில் திடீரென உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 09 ஆம் திகதி தடுப்பூசி செலுத்திக் கொண்ட அவர் நேற்று முன்தினம் திடீரென ஏறபட்ட உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். ஸ்கந்தவரோதய ஆரம்பப் பாடசாலை அதிபர் தயானந்தன் என்ற அதிபரே உயிரிழந்தவராவார்.

இதேவேளை தமக்கிருக்கும் நோய் பாதிப்புகள் குறித்து மருத்துவர்களுக்கு தெரியப்படுத்தி தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதால் பாதிப்புகளை முற்றாகத் தவிர்த்துக்கொள்ள முடியும் என சுகாதார துறையினர் தெரிவித்தனர்.

யாழ்.குடாநாட்டில் 50 ஆயிரம் பேருக்கு 2 கட்டங்களாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. . தடுப்பூசி போட்டவர்களிடையே ஆபத்தான சம்பவங்கள் எவையும் பதிவாகவில்லை என சுகாதாரத் துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |