மட்டக்களப்பு- கரடியனாறு பகுதியில் சட்டவிரோதமாக செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு- கரடியனாறு வாவிகளில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த மற்றும் மரங்களை வெட்டிய ஆறு பேரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்திய மூன்று டிப்பர் வண்டிகள், இரண்டு உழவு இயந்திரங்கள் மற்றும் ஜே.சி.பி இயந்திரங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர்களான வாகனங்களின் சாரதிகள் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக கரடியனாறு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவர்களில் சிலர் அனுமதிப்பத்திரமின்றி மணல் அகழ்ந்துள்ளனர். மேலும் சிலர் அனுமதிப்பத்திர விதிமுறைகளுக்கு முரணாக மணல் அகழ்ந்ததாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.
இதேவேளை சட்டவிரோத மணல் அகழ்விற்காக காட்டுவழியாக வாகனங்களைக் கொண்டுசெல்லும் நோக்குடன் பனைமரங்களை வெட்டி அழித்து குறுக்குப்பாதை அமைப்பிற்குப் பயன்படுத்தப்பட்ட ஜே.சி.பி இயந்திரம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கரடியனாறு காவல்துறையினர் தெரிவித்தனர்.
0 comments: