பாடசாலை மாணவர்களுக்கு இணைய வசதிகள் மற்றும் ரப்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இலங்கையில் நிலவும் கொரோனா வைரஸ் சூழ்நிலையில் மாணவர்கள் ஒன்லைன் கல்வியை எளிதில் அணுகுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கருதப்படுகிறது.
இது தொடர்பாக சிரேஷ்ட அமைச்சர்கள் திங்கள்கிழமை (21) அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒன்லைன் கல்வியில் சிரமப்படும் பாடசாலை மாணவர்களுக்கு இலவச இணையம் மற்றும் ரப்களை வழங்கும் திட்டம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அமைச்சர் நமல் ராஜபக்ஷ கடந்த வாரம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments: