Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று - 232 பேருக்கு கொரோனா ! 03 மரணங்கள் பதிவு !

 


மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று வெள்ளிக்கிழமை 232 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் கொரோனாவினால் மூன்று மரணங்களும் இடம் பெற்றுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சகாதார பிரதி பணிப்பாளர் வைத்தியர் என்.மயூரன் இன்று சனிக்கிழமை தெரிவித்தார்.

கொரோன வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருவரும் , ஏறாவூர் பிரதேசத்தில் ஒருவருமாக மூன்று மரணங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் என்று அவர் மேலும் தெரிவித்தார். 

இதுவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் கொவிட் தொற்றால் 70 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்றைய தொற்றாளர் விபரம் - சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு ரீதியாக 

மட்டக்களப்பு - 50
களுவாஞ்சிகுடி - 02
வவுணதீவு - 22
காத்தன்குடி -28
ஓட்டமாவடி - 11
கோறளைப்பற்று மத்தி - 40
ஏறாவூர் - 46
பட்டிப்பளை -05
ஆரையம்பதி - 08
வாகரை -17

Post a Comment

0 Comments