Home » » கொரோனாவுக்கு சிகிச்சைபெறும் நோயாளர்கள் அதிகரிப்பால் படுக்கைகளுக்குப் பற்றாக்குறை!

கொரோனாவுக்கு சிகிச்சைபெறும் நோயாளர்கள் அதிகரிப்பால் படுக்கைகளுக்குப் பற்றாக்குறை!

 


வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 13ஆயிரத்தைக் கடந்துள்ளது.


கடந்த ஏப்ரல் மாதத்தின் முதலாம் திகதி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்ற கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 731 ஆக பதிவாகியிருந்தது.

எனினும், ஏப்ரல் மாதத்தின் ஆரம்பம் முதல் மே மாதத்தின் ஆரம்பம் வரையான குறுகிய காலப்பகுதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 13 824 ஆகக் காணப்படுகிறது.

தற்போதைய நிலையில் வைத்தியசாலைகள் கொரோனா தொற்றாளர்களால் நிரம்பியுள்ளதால் விடுதிகளுக்கு அல்லது படுக்கைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படாலம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |