Advertisement

Responsive Advertisement

காற்றில் பரவும் கொரோனா – வியட்நாம் சென்றவர்களுக்கு இலங்கை வர அனுமதி மறுப்பு!

 


வியட்நாமுக்கு கடந்த 14 நாட்களுக்குள் சென்ற விமானப் பயணிகள் இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.


உடன்அமுலாகும் வகையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, கடந்த 14 நாட்களுக்குள் வியட்நாம் சென்ற பயணிகள் மற்றும் இடைத்தங்கல் பயணிகள் எவருக்கும் இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதியளிக்கப்படமாட்டாது என அந்த மேலும் தெரிவித்துள்ளது.

வியட்நாமில் உள்ள அதிகாரிகள் புதிய கொரோனா வைரஸ் மாறுபாட்டைக் கண்டறிந்துள்ளனர்.

குறித்த மாறுபாடு இந்திய மற்றும் பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட கொவிட் -19 வகைகளின் கலவை என்றும் அது காற்றில் வேகமாகப் பரவும் என்றும் அந்நாட்டு சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments