இலங்கையில் இன்று இதுவரையில் 2,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.
இன்று மாலை வெளியான கொவிட் அறிக்கையின்படி 1,531 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், சற்றுமுன் மேலும் 1,351 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 185,661 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் 1,441 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
0 Comments