Home » » பட்டிருப்பு தேசிய பாடசாலையில் 2021 ஆம் ஆண்டு க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றி பரீட்சை முடிவுகளை எதிர்பார்த்திருக்கும் மாணவர்களுக்கான ஆலோசனையும் வழிகாட்டலும்

பட்டிருப்பு தேசிய பாடசாலையில் 2021 ஆம் ஆண்டு க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றி பரீட்சை முடிவுகளை எதிர்பார்த்திருக்கும் மாணவர்களுக்கான ஆலோசனையும் வழிகாட்டலும்

 


(   எம்.ஐ.எம்.அஸ்ஹர்)


பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை ) களுவாஞ்சிக்குடி  அதிபர். திரு.எம்.சபேஸ்குமார் அவர்களின் ஆலோசனையின் பேரில் 2021 ஆம் ஆண்டு க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றி பரீட்சை முடிவுகளை எதிர்பார்த்திருக்கும் மாணவர்கள் , எதிர்காலத்தில் க.பொ.த . உயர்தரப் பிரிவில் கல்வி கற்கும் போது தங்களுக்குரிய பாடத் தெரிவுகளை தேர்ந்தெடுத்தல் சம்பந்தமான ஆலோசனையும் வழிகாட்டலும் இன்று ( 7 )  கல்லூரி ஆராதனை மண்டபத்தில் இடம்பெற்றது.



கல்லூரி ஆசிரியர்களான திரு. எஸ்.பி.சுதர்சன் , திரு.வீ.அருணாகரன் , திரு.எஸ்.கவியரசன் , திரு.ரீ.கோகுல்ராஜ் ஆகியோர் இந.நிகழ்வில் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.
இப்பாடசாலையின் எதிர்காலஉயர்தர  பரீட்சை முடிவுகள் சிறப்பாக அமைவதுடன் , அதிகளவிலான மாணவர்கள் பல்துறையிலும் பல்கலைக் கழக அனுமதி பெறும் வீதத்தை அதிகரிக்கச் செய்வதுடன் , நாட்டுக்கும் , சமூகத்திற்கும் , பிரதேசத்திற்கும் ஏற்ற ஒழுக்கமுள்ள நற்பிரஜைகளையும் உருவாக்குவதே இந்த நிகழ்வின் முக்கிய நோக்கமாகும்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |