( எம்.ஐ.எம்.அஸ்ஹர் )
நாட்டிலுள்ள சகல பாடசாலைகளும் இம்மாதம் 10 ஆம் திகதி முதல் முதலாம் தவணை விடுமுறைக்காக மூடப்படவுள்ளன.
தமிழ் , சிங்கள பாடசாலைகள் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக இம்மாதம் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் , முஸ்லிம் பாடசாலைகள் மே மாதம் 17 ஆம் திகதி திங்கட் கிழமை இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படவுள்ளன.
புனித ரமழான் நோன்புக்காக முஸ்லிம் பாடசாலைகளுக்கு இம்மாதம் 10 ஆம் திகதி முதல் மே மாதம் 16 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச் சு அறிவித்துள்ளது.
.
0 Comments