Advertisement

Responsive Advertisement

மண்முனை தென் எருவில்பற்றில் 1231 பேருக்கு பி;.சி.ஆர் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது அதில் 31 பேர்க்கு கொரோனா


(செ.துஜியந்தன்)


மண்முனை தென் எருவில்பற்று களுவாஞ்சிகுடி சுகாதாரப் பிராந்தியத்திற்குட்பட்ட பகதிகளில் இதுவரையான காலப்பகுதியில் 1231 பேருக்கு பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவற்றில்  31 பேர் கொரோனா தொற்றக்குள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டதாகவும் களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதாரப்பணிமனை தெரிவித்துள்ளது.

களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதாரப்பணிமனையினால் தொடர்ச்சியாக பிரதேசத்தில் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அத்துடன் சுகாதார நடைமுறைகளைப்பின்பற்றாதவர்களை இனங்கண்டு அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றன.

களுவாஞ்சிகுடி சுகாதாரப்பிராந்தியத்தில் பெரியகல்லாறு கிராமத்தில் கூடுதலாக கொரோனா தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டனர். இங்கு இதுவரை 21 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். தொடர்ந்தும் பெரியகல்லாற்றின் சில வீதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள கொரோனா தொற்றாளர்களோடு தொடர்பு பட்டவர்கள் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டும் வருகின்றனர்.

நேற்று(05) செவ்வாய்க்கிழமை துறைநீலாவணை, பெரியகல்லாறு மற்றும் களுவாஞ்;சிகுடி  சுகாதார பிராந்திய அலுவலகத்திலும் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் மேலும் இருவர் தொற்றாளர்களாக அடையாளங்காணப்பட்டுள்ளனர். 

களுவாஞ்சிகுடி பிராந்தியத்தை கொரோனா தொற்றாளர்கள் அடையாளங்காணத பிரதேசமாக வைத்திருப்பதற்கு பொதுமக்கள் சுகாதாரவிதிமுறைகளைக் கடைப்பிடித்து நடக்குமாறும் பிரதேசத்தில் தூர இடங்களில் இருந்துவருகை தந்துள்ளவர்கள் பற்றிய விபரங்கள் தெரிந்தவர்கள் அப்பகுதி பொதுச்சுகாதாரப்பரிசோதகர்கள் மூலம் தெரியப்படுத்துமாறும் கேட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments