தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டார்.
குறித்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட ஆறு பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் சட்டமா அதிபரின் ஒப்புதலின் பேரில் கடந்த மாதம் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று குறித்த வழக்கு தொடர்பான இறுதி தீர்ப்பு அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் இன்று வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற விசேட நீதிபதி டி.சூசைதாசன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் போது பயங்கரவாத தடுப்பு பிரிவினர் உரிய ஆவனங்களை கொண்டுவராததன் காரணமாக அரச தரப்பு சட்டத்தரனி விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் வழக்கு ஜனவரி 11ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
0 Comments