இலங்கையின் வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், நுவரெலிய மாவட்டத்திலும் தொடர்ந்தும் மழையுடனான வானிலை நிலவுமென தெரிவிக்கபட்டுள்ளது.
அடுத்துவரும் நாட்களில் இந்த நிலைமை தொடர்ந்தும் காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும், களுத்துறை மற்றும் நுவரெலிய மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகுமென எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழைபெய்யும் சந்தர்ப்பங்களில் பொதுமக்களை மிகவும் பாதுகாப்பாக செயற்படுமாறும் அறிவுறுத்தல் விடுக்கபட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி களுத்துறை, கேகாலை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்ஹள பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கும், கேகாலை மாவட்டத்தின் ஹெியோவிட்ட பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கும் மஞ்சல் நிர மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்க்பட்டுள்ளது.
அதேபோன்று, மாத்தறை மாவட்டத்தின் கொட்டபொல பிரதேச செயலக பிரிவுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம மற்றும் கஹவத்த பிரதேச செயலக பிரிவுகளுக்கும் குறித்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அதிக மழைபெய்யும் சந்தர்ப்பங்களில், குறித்த பகுதிகளில் வாழும் மக்களை மண்சரிவு, மண்மேடு சரிந்து விழுதல் மற்றும் வெள்ள அனர்த்தங்கள் குறித்து அவதானமாக செயற்படுமாறும் இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
0 comments: