Home » » நேற்று மாத்திரம் 703 பேருக்கு கொரோனா தொற்று; மொத்த எண்ணிக்கை 28580ஆக அதிகரிப்பு...!!

நேற்று மாத்திரம் 703 பேருக்கு கொரோனா தொற்று; மொத்த எண்ணிக்கை 28580ஆக அதிகரிப்பு...!!

 


இலங்கையில் நேற்றைய தினம் (திங்கட்கிழமை) அடையாளம் காணப்பட்ட 703 கொரோனா தொற்று நோயாளிகள் தொடர்பான அறிவிப்பினை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.


அதில் 371 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் 102 பேர் கம்பஹாவை சேர்ந்தவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் பொரளையில் 192 பேருக்கும் கொழும்பு 2 இல் 32 பேருக்கும் தெமட்டகொடவில் 31 பேருக்கும் வெள்ளவத்தையில் 22 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு 64 பேர் களுத்துறையைச் சேர்ந்தவர்கள் என்றும் அம்பாறையில் 51 பேரும் ஹம்பாந்தோட்டையில் 46பேரும் கண்டியில் 25 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் நுவரெலியாவில் 22 பேருக்கும் காலியில் 12 பேருக்கும் புத்தளத்தில் 05 பேருக்கும் அனுராதபுரத்தில் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டில் இதுவரை கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 28 ஆயிரத்து 580 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 20 ஆயிரத்து 804 பேர் குணமடைந்துள்ளதுடன் 7 ஆயிரத்து 634 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 142 பேர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |