Home » » கிளிநொச்சியில் மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று- மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

கிளிநொச்சியில் மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று- மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

 


கிளிநொச்சியில் இன்று மேலும் 5 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை 72 வயதான முதியவர் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனையில் நேற்று (25) 5 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

72 வயது முதியவர் தொற்றுடன் அடையளம் காணப்பட்டபோது, அவர் தொற்றிற்குள்ளான விதம் தொடர்பாக சந்தேகம் ஏற்பட்டிருந்தது.

அவர் பணியாற்றிய எரிபொருள் விற்பனை நிலையத்திற்கு அண்மையில் இருந்த தண்ணீர் போத்தல் விநியோக மையத்தின் மூலம், அல்லது வேறு நிறுவனத்தின் பணியாளர்கள் மூலம் தொற்று ஏற்பட்டிருக்கலாமென சந்தேகம் ஏற்பட்டது.

இன்றைய பி.சி.ஆர் முடிவுகளின்படி, முதியவர் பணியாற்றிய எரிபொருள் விற்பனைநிலையத்தின் அருகிலுள்ள தண்ணீர் விநியோக நிலையத்தில் உள்ள 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தண்ணீர் விநியோக நிலையத்தில் ஊடாக முதியவர் தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் போது தொற்றாளரின் மருமகனான எரிபொருள் விற்பனை நிலையத்தின் உரிமையாளர் மற்றும் பிரிதொருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, தண்ணீர் விற்பைனை நிறுவனத்தின் மொத்த விற்பனையாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தன்மை பற்றிய விபரத்தை வழங்க கோரப்பட்டுள்ளதுடன் உடனடியாக சுகாதார வைத்திய அதிகாரியை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |