Home »
எமது பகுதிச் செய்திகள்
» சற்று முன்னர் மேலும் 190 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...!!
சற்று முன்னர் மேலும் 190 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...!!
மினுவாங்கொடை ப்ரெண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை கொத்தணியில் மேலும் 190 ஊழியர்களுக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணியில் முன்னதாக 832 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியிருந்தது.
இந்த நிலையில், மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணியில், இதுவரையில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 22 ஆக அதிகரித்துள்ளது
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: