எஹெலியகொட மருத்துவ பிரிவில் இன்று எட்டு புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும் பேலியகொட மீன் சந்தை மற்றும் கொழும்பு துறைமுகக் கப்பல்களில் உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவர்களில் சிறிசமன்புர பகுதியில் வசிக்கும் மீன் பிடிப்பவரின் மனைவியும், அவரது 11 மாத குழந்தை மற்றும் அவரது சகோதரரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதையடுத்து அவர்களது நண்பர்கள் சுமார் 200 பேர் வீட்டிலேயே சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
0 Comments