Home » » பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது!!

பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது!!

இலங்கையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை கருத்திற் கொண்டு இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஒரு நாள் மற்றும் சாதாரண சேவைகள் மீள அறிவிக்கும் வரையில் மூடப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

சான்றிதழ்களைப் பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் online ஊடாக அல்லது மின்னஞ்சல் மூலம் விண்ணப்பித்து 48 மணி நேரத்திற்குள் சான்றிதழ்கள் உங்கள் வீடுகளுக்கே கிடைப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலதிக தகவல்களுக்கு பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணைதளமான www.doenets.lk என்ற இணைய தளத்தின் ஊடாக அல்லது 0112784323 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக சான்றிதல் பிரிவை தொடர்பு கொள்ள முடியும் எனவும் 1911 என்ற இலக்கத்திற்கு அழைத்து தகவல்களை பெற்று கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |