Home » » சுமந்திரனின் பொய்யினால் சிறையில் தள்ளப்பட்ட15 இளைஞர்கள்!

சுமந்திரனின் பொய்யினால் சிறையில் தள்ளப்பட்ட15 இளைஞர்கள்!

அம்பாறை மாவட்ட தேர்தல் நிலைமை தொடர்பில் விநாயகமூர்த்தி முரளிதரன் கட்சி வேட்பாளர்களை இன்று முற்பகல் சந்தித்து கலந்துரையாடிய பின்னர் கல்முனை கட்சி காரியாலயத்தில் விசேட செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்தியுள்ளார்.
இதன் போது சுமந்திரனின் பொய் கிழக்கு மக்களிடம் எடுபடாது எனவும் இவரின் செயற்பாட்டினால் 15 இளைஞர்கள் சிறையில் அரசியல் கைதிகளாக உள்ளனர் எனவும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
சுமந்திரன் பற்றி நான் பெரிதாக எடுத்துக்கெள்வதில்லை அவருக்கு வடக்கு கிழக்கு பற்றி எதுவும் தெரியாது. அவர் கொழும்பிலே பிறந்து வாழ்ர்ந்தவர். சுமந்திரனின் பொய் கிழக்கு மக்களிடம் எடுபடாது.
இவரின் செயற்பாட்டினால் 15 இளைஞர்கள் சிறையில் அரசியல் கைதிகளாக உள்ளனர். கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தோல்வியடையும் என்பதை உணர்ந்து கொண்டு தான் தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் இங்கு வந்து மக்களை குழப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். எங்களுடன் ஒப்பிடும் போது சுமந்திரன்அரசியல் கத்துக்குட்டி தான் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |