Home » » கதிர்காம பாத யாத்திரையை தடை செய்ய வேண்டாம்,ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாரை விகாராதிபதி அம்பிட்டிய சுமணரட்ன தேரர்

கதிர்காம பாத யாத்திரையை தடை செய்ய வேண்டாம்,ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாரை விகாராதிபதி அம்பிட்டிய சுமணரட்ன தேரர்

கதிர்காம பாதயாத்திரைகளான எமது இந்து மக்கள் தமது நேர்த்தக் கடன்களை நிறைவேற்றிவிட்டு உடனே மீண்டும் திரும்புவதற்கான சூழலை ஏற்படுத்தி கொடுப்பதற்கு ஜனாதிபதி, கவனம் செலுத்த வேண்டும் என மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாரை விகாராதிபதி அம்பிட்டிய சுமணரட்ன தேரர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாரையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்தார்
இதன்போது மேலும் அவர் தெரிவிக்கையில்,
கதிர்காம உற்சவம் தற்போது ஆரம்பமாகியுள்ள நிலையில் இந்து பௌத்த மக்கள் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்வதற்கான இடமாக கதிர்காமம் அமைந்துள்ளது. இந்த நிலையில் யாழ்ப்பாணம், மன்னார், வவுணியா , திருகோணமலை மற்றும் கிழக்கு மாகாணத்தில் சகல பிரதேசங்களிலிருந்து எமது இந்து மக்கள் கதிர்காமத்திற்கு நடந்து செல்கின்றார்கள்
அவர்கள் நேத்திக்கடன்களை வைத்து அவற்றை நிறைவேற்றுதற்காக செல்கின்றார்கள் ஆனால் இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள கொரோனா நிலையின் காரணமாக பயபக்தியுடன் இப்புனித பாதயாத்திரையை மேற்கொண்ட இந்து மக்கள் கதிர்காமம் செல்லமுடியாத நிலையில் நிர்க்கதியாக இடைநடுவில் நிற்கின்றனர்
காட்டுவழியினூடாக அவர்கள் இப் புனித பயணத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்லமுடியாது இடையில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளமை மிகவும் கலைக்கிடமானது
எனவே இவர்களுக்காக ஜனாதிபதி, அரசும் பாதுகாப்பு துறையினரும் இது தொடர்பாக மேலான கவனத்தைச் செலுத்தி இவர்கள் நடந்து சென்று இவர்கள் கதிர்காமத்தில் தரித்திருக்காமல் தங்களது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றிவிட்டு உடனே மீண்டும் திரும்புவதற்கான சூழலை ஏற்படுத்தி கொடுத்தால் அவர்கள் இறைவனுடைய ஆசிர்வாதத்தை பெறும் பாக்கியம் கிட்டும்
இதனை நான் ஒரு செய்தியாக தாம் வெளியிடுவதாக கூறிய தேரர், விசேடமாக இதற்கு நிறை இந்து மக்கள் கால்நடையாக செல்ல முடியாமையினால் என்னுடைய விகாரைக்கு சமூகமளித்து இதனை ஜனாதிபதியிடம் முன்வைத்து தங்களது நேர்த்திகடனை முடித்துவிட்டு திரும்புவதற்கு கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே பாதுகாப்பு துறையினர் எமது இந்து மக்களுக்கு பாதுகாப்பை வழங்கி அவர்கள் மீண்டும் திரும்பிவர உதவுவார்கள் என நம்புகின்றேன்” என்றார்
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |