Home » » சடுதியாக அதிகரித்த கொரோனா நோயாளர்கள்

சடுதியாக அதிகரித்த கொரோனா நோயாளர்கள்

இரண்டாம் இணைப்பு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இன்று 33 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 751 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 10 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். அதையடுத்துக் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 194 ஆக உயர்ந்துள்ளது.
அந்தவகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்டுள்ள 751 பேரில் தற்போது 549 நோயாளிகள் 7 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே மேலும் 26 வைத்தியசாலைகளில் 137 பேர் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
ஸ்ரீலங்காவில் சுகாதார அமைச்சு சற்றுமுன்னர் வெளியிட்ட அறிக்கையின்படி கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 732 ஆக அதிகரித்துள்ளது.
வெளிவந்த அறிக்கையின்படி இன்றையதினம் 14 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி வைத்தியசாலையில் 530 பேர் உள்ளதுடன் குணமடைந் 194 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

அத்துடன் இன்றைய பெண் ஒருவரின் மரணத்துடன் எண்மர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |