ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
72 வயதான பெண்ணொருவரே உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அவர் பொல்பித்திகம பிரதேசத்தை சேர்ந்தவர் என எனவும் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்த முதல் பெண் இவராவார்.
இதேவேளை இன்றையதினத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 721 ஆக அதிகரித்துள்ளது.
519 நோயாளிகள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் இன்றையதினம் மூன்று நோயாளிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
194 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் எட்டுப்பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
0 comments: