இலங்கை முழுவதும் இன்று இரவு முதல் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இன்று இரவு 8 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை தவிர்த்து ஏனைய பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை 5 மணிக்கு நீக்கப்பட்டது.
எப்படியிருப்பினும் கொழும்பு மற்றும் கம்பஹாவை தவிர்த்து ஏனைய மாவட்டங்களில் மே மாதம் 18ஆம் திகதி அதிகாலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர் மே மாதம் 23ஆம் திகதி வரை இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மாத்திரம் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கையை முன்னெடுக்கும் நடவடிக்கை கடந்த 11ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய மே மாதம் 18ஆம் திகதி திங்கட்கிழமை முதல் வேலைத்திட்டங்கள் பலவற்றை முன்னெடுத்து செல்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று இரவு 8 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை தவிர்த்து ஏனைய பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை 5 மணிக்கு நீக்கப்பட்டது.
எப்படியிருப்பினும் கொழும்பு மற்றும் கம்பஹாவை தவிர்த்து ஏனைய மாவட்டங்களில் மே மாதம் 18ஆம் திகதி அதிகாலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர் மே மாதம் 23ஆம் திகதி வரை இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மாத்திரம் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கையை முன்னெடுக்கும் நடவடிக்கை கடந்த 11ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய மே மாதம் 18ஆம் திகதி திங்கட்கிழமை முதல் வேலைத்திட்டங்கள் பலவற்றை முன்னெடுத்து செல்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
0 comments: