நான் வெளிநாடு(பிரான்சு)வந்து 10 வருடங்கள் ஆகிவிட்டது. நான் காய்ச்சல் வந்துஇதுவரை ஒரு நாளாகூட படுக்கையில் கிடந்தது கிடையாது. அதாவது காய்ச்சல்என்னை தாக்குவதே இல்லை என்று கூறுகிறேன்.
ஆனால் ….
கடந்த 20.03.2020 அன்று கொறோனா என்னை தாக்கிவிட்டது.
முதலாம் நாள் பின்னேரம் எனக்கு தும்மிக்கொண்டிருந்தது.
இரண்டாம் நாள் காலை எழுந்ததும் மூக்கு வாய் தொண்டை அடைப்பாக இருந்தது.
அன்று இரவு காய்ச்சல் காய்ந்தது . உடம்பும் வலித்தது.
காச்சலுக்கு பாவிக்கும் இங்கு உள்ள பரசிற்றமோல் வகையை சேர்ந்த சாதாரணகாய்ச்சல் குளிசையை 4மணித்தியாலத்திற்கு ஒன்று என்ற விகிதத்தில்எடுத்திருந்தேன்.
மறுநாள் காலைவரை தும்மல் சுவாச அடைப்பு காய்ச்சலுடன் இருந்தேன். காய்ச்சல்குறைவாக விட்டு விட்டு காய்ந்து கொண்டிருந்தது.
வீட்டிலே படுக்கையில் கிடந்து விட்டேன். நான் கொறோனாவால் பாதிக்கப்பட்டுவிட்டேன் என உணர்ந்தேன்.
கொறோனா காரணமாக பிரான்சில் உள்ள வைத்திய சாலைகளில் வெளி நோயாளர்பிரிவு (OPT) மூடப்பட்டு இருந்ததுடன் 18 march ல் இருந்து இன்றுவரை இங்குஊரடங்கு சட்டமும் அமுலில் உள்ளதால் வைத்திய அவசர இலக்கத்தை தொடர்புகொண்டு அம்புலன்ஸ் ற்கு அழைத்தேன். அவர்கள் இது கொறோனாவின் ஆரம்பகட்டமாக இருக்கலாம். வைத்திய சாலையில் இடம் இல்லை.
எனவே வீட்டில்
தனிமையில் இருக்கும்படியும் நீராவியும் பரசிற்றமோல் மாத்திரையை6மணித்தியாலத்திற்கு ஒரு தடவை எடுக்கும் படியும்.
சூடான பானங்களை அடிக்கடி குடிக்கும்படியும் அறிவுறுத்தினர். வருத்தம்சரிவராவிட்டால் 4 நாட்களின் பின்னர் மீண்டும் call பண்ணும்படி கூறிவிட்டுஅழைப்பை துண்டித்தனர்.
***அவர்கள் சொன்னபடி நீராவியை (மஞ்சள். தேசிக்காய். விக்ஸ் கலந்த) அன்றுபகலில் மட்டும் 13 தடைவைகள் பிடித்தேன். ஒவ்வொரு தடவையும் குறைந்த பட்சம்7-10 நிமிடம் நீராவி பிடித்தேன்.
*** உப்பு தேசிக்காய் கலந்த சுடுதண்ணீர் ½ மணிக்கு ஒருதடவை என ஒவ்வொரு Tea கப் ல் குடித்தேன்.
மறுநாள் காலை காச்சல் மூக்கடைப்பு அனைத்தும் போனது.
கொரோனா போய்விட்டது.
ஆனால் அன்று தொடக்கம் இன்றுவரை எந்த ஒரு மணத்தினையும் மூக்கால் உணரமுடியவில்லை. நாக்கில் புளியை தவிர வேறு சுவைகளை அறிய முடியவில்லை.
எனக்குப்பின் எனது வீட்டில் வசிப்பவர்கள் வேறு 3 நபர்களுக்கும் கொறோனாவந்தது. நீராவிதான் மருந்தாக அமைந்தது.
இறுதியாக நான் கூற வருகின்ற விடையம்…
கொறோனா வந்தால் சுவாசப்பையில் சளியை அதிகளவில் உற்பத்தி செய்துசுவாசத்தில் தடங்கலை ஏற்படுத்தி மரணத்தை ஏற்படுத்துவதுதான்கொறோனாவின் வேலை.
எனவே நீராவி மூலம் எம்மால் நிச்சயமாக கொறோனாவை கட்டுப்படுத்த முடியும் .
சளி உற்பத்தியை நீராவி மூலம் கட்டுப்படுத்தலாம்.
ஒருவேளை உங்களுக்கு தெரிந்தவர்கள் யாருக்கும் எதிர்காலத்தில் கொரோனாவந்தால் வைத்தியசாலைக்கு போகும்வரையான காலப்பகுதியில் நீராவியேபிடியுங்கள்.
கொரோணாவிற்கு என்று சரியான மருந்து எதுவும் இன்றுவரை மருத்துவவிஞ்ஞானத்தில் கண்டுபிடிக்கப்படவில்லை. வதந்திகள் பல உலாவுகிறது. நம்பவேண்டாம்
கொறோனா– பயப்படுவதற்கு உரிய நோய் இல்லை. வந்தால் தனிமைஒதுங்கிகொள்ளுங்கள். வீட்டில் யாருக்காவது வந்தால் நீராவியை அடிக்கடி அடிக்கடிமற்றவர்களும் நீங்களும் பிடியுங்கள். இது எங்கள் 4 பேரின் அனுபவத்தின் ஊடாககண்டறிந்த உண்மை.
0 comments: