மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் சுவாமிகள் அசாதாரண சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலருணவுப் பொதிகளை கட்டம் கட்டமாக விநியோகித்து வருகின்றனர்.
காரைதீவு ஆஸ்ரமத்தில் வைத்து அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்திற்கு 150 உலருணவுப் பொதிகள் அக்கரைப்பற்று மக்களுக்கு வழங்குவதற்காக கையளிக்கப்பட்டது.
பல்வேறு பிரதேசங்களில் உள்ள வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதேச செயலாளர்களின் வழிகாட்டலுடன் உலருணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் சுவாமிகள் மற்றும் அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
0 comments: