Home » » மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனால் அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்திற்கு உலருணவுப் பொதிகள் கையளிப்பு

மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனால் அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்திற்கு உலருணவுப் பொதிகள் கையளிப்பு

ட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் சுவாமிகள் அசாதாரண சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலருணவுப் பொதிகளை கட்டம் கட்டமாக விநியோகித்து வருகின்றனர். 

பல்வேறு பிரதேசங்களில் உள்ள வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதேச செயலாளர்களின் வழிகாட்டலுடன் உலருணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டு வருகிறது.

காரைதீவு ஆஸ்ரமத்தில் வைத்து அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்திற்கு 150 உலருணவுப் பொதிகள் அக்கரைப்பற்று மக்களுக்கு வழங்குவதற்காக கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் சுவாமிகள் மற்றும் அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.



Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |