Home » » மனைவி மற்றும் மகளை கொலை செய்து விட்டு தற்கொலை செய்துகொண்ட நபர்

மனைவி மற்றும் மகளை கொலை செய்து விட்டு தற்கொலை செய்துகொண்ட நபர்


கம்பஹா ஹேனேகம, கஹாடான முத்தேட்டுவவத்தை பிரதேசத்தில் கொலை செய்யப்பட்ட 28 வயதான பெண், 3 வயதான மகள் மற்றும் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் வீட்டின் உரிமையாளர் ஆகியோரின் சடலங்களை தாம் மீட்டுள்ளதாக மல்வத்துஹிரியபிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மனைவி மற்றும் 3 வயதான மகளை கொன்று விட்டு பெண்ணின் கணவர் தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர.
வீட்டில் கட்டிலில் காணப்பட்ட பெண்ணின் சடலத்தில் வெட்டுக்காயங்கள் இருப்பதாகவும் மகளின் கழுத்தி கீறல் காயங்கள் இருப்பதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
28 வயதான எச்.ஜீ.தில்ருக்ஷி, 3 வயதான கே.கே.ஷனுதி சாவிந்தியா ஆகியோரே கொலை செய்யப்பட்டுள்ளனர். 37 வயதான நபர் நபர் இவர்களை கொலை செய்து விட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்த கொலைக்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் மரணத்திற்கு பின்னரான விசாரணைகள் இன்று கம்பஹா வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |