Home » » ஸ்ரீலங்கா மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

ஸ்ரீலங்கா மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

ஸ்ரீலங்கா மக்களின் கடனட்டைகளில் இருந்து தரவுகளை திருடியமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளது.
இணையத்தளத்தினூடாக வீடுகளுக்கு பொருட்களை விநியோகிப்பதாக தெரிவித்து இந்த மோசடிகள் நடைபெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறான மோசடிகளில் ஈடுபடும் போலி இணையத்தளங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கைப் பிரிவின் தகவல் தொடர்பாடல் பிரிவு பொறியியலாளர் ரவிந்து மீகஸ்முல்ல தெரிவித்துள்ளார்.
அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாத அவ்வாறான இணையத்தளங்களில் இருந்து பொருட்கள் கொள்வனவில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அவர் பொதுமக்களை எச்சரித்துள்ளார்.

இணையத்தளத்தினூடாக பொருட்களை விநியோகிப்பதாக தெரிவித்து நிதி மோசடியில் ஈடுபட முயன்ற சில போலி இணையத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கொரோனா வைரஸ் காரணமாக தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஏராளமான மக்கள் இணையத்தளத்தினூடாகவே பொருட்களை கொள்வனவு செய்கின்றனர். இந்த நிலையில் பொது மக்களுக்கு இந்த அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |