உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் ஒருவருட நினைவு தினமான இன்று வவுனியாவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
வவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்தில் இராணுவம் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதுடன் ஏனைய கிறிஸ்தவ தேவாலயங்களில் இராணுவ பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் முதலாம் ஆண்டு நினைவு நாளான இன்று வழிபாடுகள் இடம்பெற்று வரும் நிலையிலேயே இப்பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments: