கொரோனா வைரஸ் தொடர்பில் சமூக வலைத்தளத்தில் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டு வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதில் 44 வயதுடைய வாத்துவ பகுதியைச் சேர்ந்த பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொடர்பில் போலி செய்திகளை பரப்ப வேண்டாம். அவ்வாறு பரப்பினால் அவர் கைது செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்ட போதும் இந்த நிலை தொடாவதாக குறிப்பிடப்படுகின்றது.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments: