Home » » நாடாளுமன்றத் தேர்தல் ஜூன் 20 இல் - மகிந்த தேசப்பிரிய அறிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தல் ஜூன் 20 இல் - மகிந்த தேசப்பிரிய அறிவிப்பு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி நடத்தப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர்கள் முன்னிலையில் இன்று நடைபெற்ற விசேட கூட்டத்தின் போது எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி தேர்தலை நடத்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
தேர்தலை நடத்துவதற்கான திகதியை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவிப்பு விரைவில் வெளியிடப்படவுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |