Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சுவிஸ் நாட்டிலிருந்து வந்த மதபோதகரின் நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

சுவிஸ் நாட்டில் இருந்து வருகைதந்த மதபோதகருக்கு கொரோனா வைரஸ் தொற்றுஏ ற்பட்டிருப்பது வெளியுறவு அமைச்சின் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளது என வடமாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
மேற்படிசுவிஸ் நாட்டில் இருந்து இந்தமாதம் பத்தாம் திகதி வருகை தந்த அறுபத்தொரு வயதுடைய சுவிஸ் பிரஜையான மதபோதகர் சிவராஜ் போல் சற்குணராஐா குறிப்பாக யாழ்ப்பாணம் அரியாலை கண்டிவீதியில்அமைந்துள்ள பிலதெனியா தேவாலயத்தில் விசேடஆராதனை நிகழ்விலும் வேறு சிலநிகழ்வுகளிலும் பங்குபற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்பின்னர் இம்மாதம் பதினாறாம் திகதி மீண்டும் தனதுநாட்டுக்கு சென்ற பின்னர் அங்கு அவருக்கு கொரனா வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தற்பொழுது சுவிஸ் சிலாந்தின் பேண்நகரில் உள்ள இன்செல்ஸ் பிற்றல் பல்கலைக்கழக வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கான சிகிச்சையினை அவர் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மேற்குறித்த போதகரின் தலைமையில் நடைபெற்ற ஆராதனை நிகழ்வுகளில் பங்கெடுத்த அனைவரும் தங்கள் வீடுகளில் உடனடியாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதுடன் தங்களது விபரங்களை அருகில் உள்ள பொதுச்சுகாதார உத்தியோகத்தருக்கு தெரியப்படுத்தி உரியநடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தங்களுடையதும் தங்களைச்சார்ந்தவர்களதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது மிக அவசியமானதென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவறும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும். என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments