மஹரகம அபேக்ஷா மருத்துவமனைக்கு இரத்தம் தேவைப்படுவதாக மருத்துவமனையின் பணிப்பாளர் டொக்டர் வசந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
சுமார் 1500 நோயாளர்களை கொண்ட இந்த மருத்துவமனைக்கு உடனடியாக ரத்தம் தேவைப்படுகிறது.
எனவே இரத்த தானம் வழங்க விரும்புவோர் வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு வந்து இரத்தம் வழங்க முடியுமெனவும் அவர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
ரத்த தானம் செய்பவர்கள் மருத்துவனையுடன் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments: